தகுதித்தேர்வு வழக்கில் தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படுமா ??

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.

  மேலும் TET தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.

இருதரப்பும் தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...