பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34, டீசல் ரூ.2.37 அதிகரிப்பு !

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1ரூ. 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 2ரூ. 37 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
நிர்ணயம்செய்கின்றன.
மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் சனிக்கிழமை இரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1ரூ. 34 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 2ரூ. 37 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...