தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் அவசியமில்லை...!

 சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஜெயலலிதா உடல் குறித்த விபரங்களை தெரிவிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 5க்கும் மேற்பட்ட அறிக்கைகளை மட்டுமே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விபரங்களை வெளியிட தமிழக தலைமை செயலாளர்,உள்துறை செயலாளர்,அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி,சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...