வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்!!!

அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் களில் பழைய நோட்டுகள் வாங்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:





* வங்கியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவது இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.



* வங்கியில் பழைய நோட்டுகளை கொடுத்து சில்லறை பெற முடியாது.



* இனி பழைய 500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.



* பழைய நோட்டுகள் மூலம் பொது சேவைகள் பெற டிச. 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.



* பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பெட்ரோல் பங்க்குகள் மற்றும் மருத்துவமனைகளில் டிச. 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.



* தனிநபர்களுக்கான குடிநீர், மின் கட்டணம், மட்டும் பழைய நோட்டுகளை பயன்படுத்தலாம்.



* வெளிநாட்டினர் வாரம் ஒன்றுக்கு ரூ. 5000 வரை பணத்தை தங்களது பாஸ்போர்ட்டை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.



* மத்திய மாநில மாநகராட்சி பள்ளிகளில் ரூ 2,000 வரை பழைய நோட்டுகளை கொடுத்து கல்வி கட்டணம் செலுத்தலாம்.



* ரூ 500 பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி 500 ரூபாய் வரை பிரீப்பெய்டு டாப்அப் செய்து கொள்ளலாம்.



* டிச.3 முதல் சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கட்டணமாக செலுத்தலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...