அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வசதி!!!

அரசு, 'இ - சேவை' மையங்களில், ஓய்வூதியம் பெறுவோருக்கு, உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும் சேவை, துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், கேபிள், 'டிவி' நிறுவனம், மாநிலம் முழுவதும், 486 'இ - சேவை' மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. நேற்று முதல், கூடுதல் சேவையாக,


ஓய்வூதியர்களுக்கு, மின்னணு, உயிர் வாழ் சான்றிதழ் வழங்கும் சேவை துவக்கப் பட்டுள்ளது. 'ஓய்வூதியம் பெறுவோர், அதற்கான தகவல்களுடன், ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். பின், கைவிரல் ரேகையை பதிவு செய்ததும், சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு, 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...