ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கவுதம் அதானி நிறுவனத்துக்கு வழங்கிய கடன் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வேண்டும் என ரமேஷ் ராஞ்சர்தாஸ் ஜோஷி என்பவர் கேட்டறிந்தார். இதற்கு மத்திய தகவல் ஆணையர் மஞ்சுளா பிரஷர் கூறியதாவது:மூன்றாம் நபருக்கு
அளிக்கப்பட்ட வர்த்தக கடன் விவரங்களை மனுதாரர் கேட்டுள்ளார். நம்பிக்கை அடிப்படையிலான தகவல்களை தெரிவிக்க ஆர்டிஐ சட்டத்தின் 8(1)(டி) மற்றும்(இ) பிரிவில் விலக்கு உள்ளது. மூன்றாம் நபரின் கடன் விவரங்களை தெரிவிக்கவும் ஆர்டிஐ சட்டத்தின் 8(1)(ஜே) பிரிவில் விலக்கு உள்ளது. இந்த விவரத்தை கேட்பதில் என்ன பொதுநலம் உள்ளது என்பதையும் மனுதாரர் குறிப்பிடவில்லை.மனுதாரர் கேட்ட தகவல்கள் ஆர்டிஐ சட்டத்தின் விலக்கு பரிவின் கீழ் வருவதால் இந்த தகவல்களை தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அளிக்கப்பட்ட வர்த்தக கடன் விவரங்களை மனுதாரர் கேட்டுள்ளார். நம்பிக்கை அடிப்படையிலான தகவல்களை தெரிவிக்க ஆர்டிஐ சட்டத்தின் 8(1)(டி) மற்றும்(இ) பிரிவில் விலக்கு உள்ளது. மூன்றாம் நபரின் கடன் விவரங்களை தெரிவிக்கவும் ஆர்டிஐ சட்டத்தின் 8(1)(ஜே) பிரிவில் விலக்கு உள்ளது. இந்த விவரத்தை கேட்பதில் என்ன பொதுநலம் உள்ளது என்பதையும் மனுதாரர் குறிப்பிடவில்லை.மனுதாரர் கேட்ட தகவல்கள் ஆர்டிஐ சட்டத்தின் விலக்கு பரிவின் கீழ் வருவதால் இந்த தகவல்களை தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.