நோக்­கி­யாவின் புதிய போன்கள் ரூ.2,000க்கும் குறை­வான விலை!!!

உலகம் முழு­வதும், 2,000 ரூபாய்க்கும் குறை­வான விலையில், நோக்­கியா போன்­களை விற்­ப­னைக்கு வெளி­யிட உள்­ளது, எச்.எம்.டி., குளோபல் நிறு­வனம். மேலும், வெளி­நா­டு­களில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் அதே நாளில், இந்­தி­யா­விலும் இந்த போன்கள் விற்­ப­னைக்கு வர உள்­ளன.


நோக்­கி­யாவின் மொபைல் போன் மற்றும் டேப்லட் ஆகி­ய­வற்றை விற்­பனை செய்யும் உரி­மத்தை, எச்.எம்.டி., குளோபல் எனும் நிறு­வனம் பெற்­றுள்­ளது. இந்­நி­று­வனம், முதற்­கட்­ட­மாக, 2,000 ரூபாய்க்கும் குறை­வான விலை கொண்ட, ‘நோக்­கியா 150, நோக்­கியா 150 டுயல் சிம்’ எனும், இரு மொபைல் போன்­களை அறி­முகம் செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘இந்த போன்கள், 2.4 இஞ்ச் திரை, எப்.எம்., – எம்.பி.3., வசதி, மொபைல் கேம் ஆகிய அம்­சங்கள் கொண்­ட­தாக இருக்கும்; 2017 மார்ச்­சுக்குள் அறி­மு­க­மாகும்’ என்றார்.
இந்­நி­லையில், நடப்பு நிதி­யாண்டில், ஜூலை – செப்., வரை­யி­லான காலத்தில், இந்­தி­யாவில், ஒட்­டு­மொத்த மொபைல் போன்கள் விற்­பனை, 18.1 சத­வீதம் அதி­க­ரித்து, 7.23 கோடி­யாக உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...