சென்னையில் வர்தா புயல் தாக்குதல்: ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகள் பறந்தன,சென்னையை தும்சம் செய்த வர்தா !!!

🔴🔵   *முக்கியச் செய்தி*

*சென்னையில் இருந்து........
*#BREAKING EVENT'S*



சென்னை: வர்தா புயல் சென்னையை நெருங்கி விட்ட நிலையில் வட சென்னையின் பல பகுதிகளில் பேய்க்காற்று வீசுகிறது. பல இடங்களில் கூரைகள், ஆஸ்பெஸ்டார் ஷீட்டுகள், வாட்டர் டேங்குகள் தூக்கி வீசி எறியப்பட்டுள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன. சென்னையின் வட பகுதியில்தான் கரையைக் கடக்கிறது வர்தா புயல். இதனால் அப்பகுதியில் மிக மிக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. மக்கள் வெளியில் தலை காட்ட முடியவில்லை.


பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. தொலைத் தொடர்பு கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் விழுந்துள்ளன. திருவொற்றியூரில் பல இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், கூரைகள், தட்டிகள் உள்ளிட்டவை பறந்து விட்டன. பல இடங்களில் வீட்டுக்கு மேல் வைக்கும் சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகளும் கூட காற்றின் ஆவேசம் தாங்க முடியாமல் தூக்கி வீிசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...