ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்ல பாஸ்போர்ட் பெற வேண்டியது அவசியம். தற்போது கல்லூரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலை.யில் படிக்கும் மானவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஸ்டூடண்ட் கனெக்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என,
இதுகுறித்து, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளதாவது: ‘ஸ்டூடண்ட் கனெக்ட் சேவை மூலம் நாட்டில் 37 பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குட்பட்ட கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது 89 சேவை மையங்கள் மூலம் தினமும் 50,000 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. 'ஸ்டூடண்ட் கனெக்ட்' மூலம் கல்லூரி, பல்கலை.களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
மாணவர்கள் வேலைநாட்களில் அருகிலுள்ள சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை கல்லூரி, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் தங்கியுள்ள முகவரி அல்லது பெற்றோர் நிரந்தர முகவரியில் பாஸ்போர்ட் பெறலாம். பிறப்புச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உட்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும். பாஸ்போர்ட் சேவை மையங்களில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்படும். சமர்ப்பிக்காதவர்கள், 60 நாட்களுக்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’ என்றார்.
மேலும் தகவல்களுக்கு www.passportindia.gov.in என்ற இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.