பாதுகாப்பு புகாரினால் பெயரை மாற்றிய Paytm !!

Paytm மொபைல் வாலட்டில் பாயின்ட் ஆஃப் சேல் அம்சத்தில் பாதுகாப்புப் குறைபாடு இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் அதன் பெயரை மாற்றப்பட்டுள்ளது.
Paytm மொபைல் வாலட்டில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (Point of Sale – POS) என்ற அம்சத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக வந்த புகாரினால் அது உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால், P2P என்ற மாற்று பெயரில் அதைத் திரும்ப கொண்டுவந்துள்ளது.

பாயிண்ட் ஆஃப் சேல் அம்சம் கடைகளில் ரொக்கமில்லாமல் பணம் செலுத்த பயன்பட்டது. கடைக்காரரின் மொபைலில் உள்ள Paytm அப்ளிகேஷனில் வாடிக்கையாளர்கள் வங்கி விவரங்களையும் வாங்கிய பொருளுக்கான தொகையையும் டைப் செய்ய வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கிலிருந்து கடைக்காருக்கு பணம் செலுத்தப்பட்டுவிடும்.
ஆனால், இந்த முறையில் கடைக்காரரின் மொபைலில் வங்கி விவரங்கள் அனைத்தும் டைப் செய்யப்படுவதால் அந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது என்று Paytm நிறுவனத்துக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து அந்த வசதியை நீக்கியது Paytm.
இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள P2Pயில் இந்த குறைபாடு நீக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கடைக்காரரின் Paytm அப்ளிகேஷனில் மொபைல் நம்பரை மட்டும் டைப் செய்தால் போதும். உடனே, வாடிக்கையாளரின் மொபைலுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதில், வங்கி விவரங்களையும் வாங்கிய விவரங்களுக்கான தொகையையும் வாடிக்கையாளரே டைப் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், வங்கி விவரங்கள் திருடப்படும் என்ற அச்சம் தேவையில்லை.    


             செய்தி;சாமி.செல்லதுரை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...