22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!!!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும், 22 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிவர மேற்கொள்ளாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

இவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சாமுண்டிபுரம் மற்றும் ஓடக்காடு மகாகவி துவக்கப்பள்ளி, ஈடன் கார்டன் பள்ளி, வலையங்காடு பிரேமா பள்ளி,
அனுப்பர்பாளையம் கலைமகள் பள்ளி, காந்திநகர் காருண்யா பள்ளி, சக்திதேவி பள்ளி, குமரானந்தபுரம் ஸ்ரீ கலைமகள் பள்ளி, போஸ்டல் காலனி பிருந்தாவன் பள்ளி. கணக்கம்பாளையம் ஸ்ரீ சக்தி பள்ளி, எம்.எஸ்., நகர் ஸ்டெல்லா மேரி பள்ளி, பழவஞ்சிபாளையம் விமலாபள்ளி, யூனியன் மில் ரோடு ஆதர்ஷ் பள்ளி, முத்தணம்பாளையம் கே.ஜி., பள்ளி, பழவஞ்சிபாளையம் சாம்யூ பிளே, வாவிபாளையம் அட்சயா சரஸ்வதி, பாண்டியன்நகர் மேகலை பள்ளி, போயம்பாளையம் காமாட்சியம்மன் பள்ளி, அனுப்பர்பாளையம் புதூர் நேரு பள்ளி, பெருமாநல்லூர் வாசவி பள்ளி, மகாலட்சுமிநகர் வெனீஸ்மகான் பள்ளி, 15 வேலம்பாளையம் இந்து வித்யாலாயா பள்ளி உள்ளிட்ட, 22 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளை உடனடியாக மூட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால், தங்கள் குழந்தைகளை, இப்பள்ளிகளில் சேர்ப்பதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...