அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் இன்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் படி விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.அலங்காநலூரில் பிப்ரவரி 10 ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதுபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்தனர். பின்னர் விழாக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி 5 ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வருமாறு முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறினர்.
இதுபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்தனர். பின்னர் விழாக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி 5 ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வருமாறு முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறினர்.