அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். அங்கு பிப்., 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம கமிட்டி முடிவு எடுத்தது போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க போராட்டகாரர்கள் மறுத்து
விட்டதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பினரும் மாறி, மாறி கல்வீசி கொண்டனர். இந்த கிராமம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. 20 போலீசார் காயமுற்றனர்.
9 நாளாக போராட்டம் நடத்த போராட்ட மைதானம் போலீஸ் வசமானது. இந்த கிராமம் தற்போது போலீஸ் கட்டுக்குள் வந்தது. தற்போது போலீசார் அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விட்டதால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. இரு தரப்பினரும் மாறி, மாறி கல்வீசி கொண்டனர். இந்த கிராமம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. 20 போலீசார் காயமுற்றனர்.
9 நாளாக போராட்டம் நடத்த போராட்ட மைதானம் போலீஸ் வசமானது. இந்த கிராமம் தற்போது போலீஸ் கட்டுக்குள் வந்தது. தற்போது போலீசார் அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.