ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் வட்டாரப் பொறுப்பாளர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, நமது இயக்க SSTA காலண்டருடன், டைரியும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் !!

இன்று (09/01/17) மாலை நமது சத்தியமங்கலம் வட்டாரப் பொறுப்பாளர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறி, நமது இயக்க SSTA காலண்டருடன், டைரியும் வழங்கி மகிழ்ந்தனர்.

💐நமது உறுப்பினர்களின் பணி பதிவேட்டில் விடுபட்டத் திருத்தங்களை விரைந்து சரி செய்து தரும்வண்ணம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

💐FPF, SPF, NHIS, CPS பிடித்தம் பதிவு குறித்த விளக்கம் கோரப்பட்டு தெளிவு பெறப்பட்டது.


💐தகுதி காண் பருவ காலத்தில் மலையேற்றம் இறக்கத்திற்கான பணியேற்பு இடைக்கால விடுப்பு(EL)
குறித்த தெளிவுரைகள் கேட்டு அறியப்பட்டது.

💐தக்க ஆவண நகல்களுடன் அலுவலர்கள் இருக்கும் தருணங்களில் வந்து உரிய பதிவுகளை எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்து கொள்ளுமாறு கூடுதல் உதவி தொடக்க அலுவலர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

💐கூட்டமாக வந்து சிரமமடையாமல்
 குறைந்த அளவில் வந்து பணியினைச்செம்மையாக முடித்துச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

💐ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியல் உரிய திருத்தம் செய்து தருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

💐வருமான வரி பிடித்தம்(IT) தொடர்பாக ஆடிட்டருக்கு வேண்டிய உதவிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

💐நாளை உதவி தொடக்கக் கல்வி அலுவலரையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கருத்துக்களைப் பரிமாறி பயன்பெறுவோம்.

நன்றி.
 "எண்ணங்கள் அழகானால்
 வண்ணங்களால் வாழ்வு
அழகோவியமாய் தோன்றும்"

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...