பதவி விலகிய முதல்வரின் ஆலோசகர்கள் !!

தமிழக அரசின் ஆலோசகர் பதவி வகித்த ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் கடிதத்தை அவர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் அளித்திருக்கிறார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். ஆனால் அதற்கடுத்த

ஆண்டு அவர் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். தலைமைச் செயலாளர்கள் தேவேந்திரநாத் சாரங்கி, மோகன் வர்கீஸ் சுங்கத், ஞானதேசிகன், ராமமோகன் ராவ் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கி அவர் செயல்பட்டுவந்தார். 2016இல் அதிமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, ஷீலா பாலகிருஷ்ணனும் அரசு ஆலோசகராக நீடித்துவந்தார். அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (மார்ச் 31) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில்தான் தாமாகவே முன்வந்து அரசு ஆலோசகர் பதவியிலிருந்து விலக முடிவுசெய்து அதற்கான கடிதத்தை தமிழக அரசிடம் அளித்திருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதேபோல் முதலமைச்சரின் தனிச் செயலரான வெங்கட் ரமணனும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் தனிச் செயலாளர் ராமலிங்கமும் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் அரசின் முக்கியப் பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றம், விடுவிப்பு, ராஜினாமா என அனைத்தும் மர்மமாக உள்ளது” என்று விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...