ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜினாமா, அதிகாரிகள் சஸ்பெண்ட் ரத்து என்று அரசியல் விளையாட்டில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகிய இருவரும்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று நன்றி கூறினர்.
தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் ஞானதேசிகன். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர். மேலும் நிதித்துறை மற்றும் உள்துறையில் பணியாற்றியவர். கடந்த 2011-14 ஆம் ஆண்டுகளில் மின்வாரியத் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு 2.12.14இல் தலைமைச் செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். ஆனால் திடீரென 2016ஆம் ஆண்டு ஜுன் 8ஆம் தேதி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அவருடன் சுரங்கத் துறை கமிஷனராக இருந்துவந்த அதுல் ஆனந்தும் சஸ்பெண்ட் ஆனார்.
இந்நிலையில், தற்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த இருவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ஞானதேசிகன், அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அதுல் ஆனந்த் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி கூறினர். அவர்களுக்கு முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று நன்றி கூறினர்.
தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் ஞானதேசிகன். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர். மேலும் நிதித்துறை மற்றும் உள்துறையில் பணியாற்றியவர். கடந்த 2011-14 ஆம் ஆண்டுகளில் மின்வாரியத் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு 2.12.14இல் தலைமைச் செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். ஆனால் திடீரென 2016ஆம் ஆண்டு ஜுன் 8ஆம் தேதி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அவருடன் சுரங்கத் துறை கமிஷனராக இருந்துவந்த அதுல் ஆனந்தும் சஸ்பெண்ட் ஆனார்.
இந்நிலையில், தற்போதிருக்கும் அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த இருவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ஞானதேசிகன், அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அதுல் ஆனந்த் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி கூறினர். அவர்களுக்கு முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.