எல்லை பாதுகாப்பு படைவீரர் மாயம் !!

சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் எல்லை பாதுகாப்பு படைவீரர்,தனது வீட்டிலிருந்து பணிக்கு திரும்பும்போது காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன எல்லை பாதுகாப்பு படை வீரரின் பெயர் மால்சாகிமா என்று தெரிகிறது.இவர், கத்துவா மாவட்டத்தில் உள்ள பான்சர் பகுதியில் பார்டர்
புறக்காவல் நிலையத்தில் 29வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்,மிசோராமில் உள்ள தனது வீட்டிலிருந்து,பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது,ஜலந்தர் பகுதிக்கு வந்து,அவருடைய வீட்டிற்கு செல்போனில் பேசியுள்ளார். இதையடுத்து,அவர் காணாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அவருடைய குடும்பத்தினர், பார்டர் காவல் நிலையத்தை தொடர்புக் கொண்டு, அவரை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது,அதிகாரிகள் மால்சாகிமா பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர்.

காணாமல் போன மால்சாகிமா 25 வயது மதிக்கதக்கவர். 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர், மாநிறத்தவர். இவர்,கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி காணாமல் போனார். தற்போது, ஒரு குழு இவரை தேடி வருகிறது என்று சப் இன்ஸ்பெக்டர் ஆன்டால் குமார் பிப்ரவரி 2 ஆம் தேதி தகவல் அளித்தார்.

தற்போது காவல்துறையின அவரை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...