மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்கி பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய தலைமை
வழக்கறிஞராக வேணு கோபால் (வயது 86) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1970களின் இறுதியில் மொரார்ஜி தேசாய் காலத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்.
தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வேணு கோபால் கேரளாவை சேர்ந்தவராவார். உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக வழக்கறிஞராக பணியாற்றியவர். மத்திய அரசின் 15-வது தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது