வருமான வரி வரம்பிற்குள் வருவோர், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியமானது. ஜூலை 31ம் தேதிக்குள், இதை செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை தாமதப்படுத்தாமல், உரிய நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம், பல்வேறு அனுகூலங்களையும் பெறலாம். முன்கூட்டியே வருமான வரித் தாக்கல் செய்வதால் கிடைக்கும் பலன்கள் இவை:
ரீபண்ட்: கூடுதலாக பிடிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட வரியை திரும்ப கோருவதாக இருந்தால், முன்கூட்டியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ரீபண்ட் விரைவாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. வரி மிச்சமுள்ள படிவங்களை பரிசீலிப்பதை விட, ரீபண்டிற்கான படிவங்களை பரிசீலிக்க அதிக அவகாசம் தேவைப்படுவதே இதற்கு காரணம். மேலும், செலுத்த வேண்டிய வரியை விட, ரீபண்ட், 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், வரிக் கணக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ரீபண்ட் மீது, 6 சதவீத வட்டி வழங்கப்படும். தாமதமாக செலுத்தும் போது இந்த பலன்களை பெற முடியாது.
ஆவணங்கள்: முன்கூட்டியே வரி விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடர்புடைய ஆவணங்களை சேகரிக்க போதுமான நேரம் கிடைக்கும். படிவம் 16, படிவம் 26 ஏ, கடன் சான்றிதழ், வட்டி விபரம் போன்றவற்றை பரபரப்பில்லாமல் திரட்டலாம். இவற்றுக்காக கடைசி நேரத்தில் அல்லாட வேண்டாம்.தவறுகள் திருத்தம்: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் ஏதேனும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தால், இத்தகையை தவறுகளை திருத்தி, அடுத்த ஆண்டு, ஜூலை 31ம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்யலாம். ஏதேனும் சான்றிதழை சேர்க்க மறந்திருந்தால் அல்லது குறிப்பிட்ட வரி தள்ளுபடியை கோர தவறிஇருந்தால் சரி செய்து கொள்ளலாம். தாமதமாக தாக்கல் செய்யும் போது இந்த வாய்ப்பு கிடையாது.
அபராதம்: குறிப்பிட்ட கெடுவுக்குள் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் இப்போது அபராதமும் விதிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வட்டியும் விதிக்கப்படும். குறித்த நேரத்தில் தாக்கல் செய்தால் அபராதம் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். மேலும், தொழில்முறை உதவியை நாடும் போது வல்லுனர்களுக்கு உங்கள் கணக்கை கவனிக்க போதிய அவகாசமும் கிடைக்கும்.
ரீபண்ட்: கூடுதலாக பிடிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட வரியை திரும்ப கோருவதாக இருந்தால், முன்கூட்டியே வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, ரீபண்ட் விரைவாக கிடைக்கும் வாய்ப்புள்ளது. வரி மிச்சமுள்ள படிவங்களை பரிசீலிப்பதை விட, ரீபண்டிற்கான படிவங்களை பரிசீலிக்க அதிக அவகாசம் தேவைப்படுவதே இதற்கு காரணம். மேலும், செலுத்த வேண்டிய வரியை விட, ரீபண்ட், 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், வரிக் கணக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ரீபண்ட் மீது, 6 சதவீத வட்டி வழங்கப்படும். தாமதமாக செலுத்தும் போது இந்த பலன்களை பெற முடியாது.
ஆவணங்கள்: முன்கூட்டியே வரி விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடர்புடைய ஆவணங்களை சேகரிக்க போதுமான நேரம் கிடைக்கும். படிவம் 16, படிவம் 26 ஏ, கடன் சான்றிதழ், வட்டி விபரம் போன்றவற்றை பரபரப்பில்லாமல் திரட்டலாம். இவற்றுக்காக கடைசி நேரத்தில் அல்லாட வேண்டாம்.தவறுகள் திருத்தம்: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது, எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் ஏதேனும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது. உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தால், இத்தகையை தவறுகளை திருத்தி, அடுத்த ஆண்டு, ஜூலை 31ம் தேதிக்குள் மீண்டும் தாக்கல் செய்யலாம். ஏதேனும் சான்றிதழை சேர்க்க மறந்திருந்தால் அல்லது குறிப்பிட்ட வரி தள்ளுபடியை கோர தவறிஇருந்தால் சரி செய்து கொள்ளலாம். தாமதமாக தாக்கல் செய்யும் போது இந்த வாய்ப்பு கிடையாது.
அபராதம்: குறிப்பிட்ட கெடுவுக்குள் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் இப்போது அபராதமும் விதிக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வட்டியும் விதிக்கப்படும். குறித்த நேரத்தில் தாக்கல் செய்தால் அபராதம் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். மேலும், தொழில்முறை உதவியை நாடும் போது வல்லுனர்களுக்கு உங்கள் கணக்கை கவனிக்க போதிய அவகாசமும் கிடைக்கும்.