பூகம்ப அபாயம் உள்ள இந்திய நகரங்கள் !!!


நில நடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள
பகுதிகளின் பட்டியலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் இமாச்சலப் பிரதேசத்தில் இமயமலைப் பகுதியில் நில நடுக்க அபாயம் மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


தவிர, தலைநகர் டெல்லி உட்பட 9 மாநிலங்களின் தலைநகரங்களில் நில நடுக்கம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, கவுஹாத்தி (அசாம்), காங்டோக் (சிக்கிம்), சிம்லா (இமாச்சல பிரதேசம்), டேராடூன் (உத்தராகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டிகர், பாட்னா (பீகார்), ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்), கோஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி ஆகிய நகரங்கள் வலுவான மற்றும் மிக வலுவான நில நடுக்க அபாயப் பகுதிகளின் வகைப்பாட்டில் வருகின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், வடக்கு பீகார், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை கடுமையான நில நடுக்க அபாயம் கொண்டவை. இவற்றுக்குப் பின் சற்று குறைவான நில நடுக்க அபாயம் உள்ளவையாக ஜம்மு, காஷ்மீர், டெல்லி, சிக்கிம், வடக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நகரங்கள் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...