பேரிடர் காலங்களில் பயன்பாட்டாளர்களுக்கு
பயனுள்ள தகவல்களை வழங்க உள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்கள், விபத்துகள், அகதிகளாக தஞ்சம் அடைவது, பாதுகாப்பான வழி, நிலநடுக்கம், மீட்புப்பணி, அவசர கால மொபைல் எண்கள் ஆகியவற்றை எஸ்.ஓ.எஸ்., எச்சரிக்கைகளாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான தகவல்களை சேகரிக்கவும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இத்திட்டம் முதல்கட்டமாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு நடைமுறைக்கு வருகிறது