புதிய50 ரூபாய் நோட்டுகளை மத்திய
அரசுஅறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கட்டமாக புதிதாக அச்சடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் 50 ரூபாய் நோட்டின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நீல நிறம்கொண்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், பழைய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிகிறது. மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளிவரும் இந்த ரூபாய் நோட்டின் பின்புறம், தென்னிந்தியாவைச் சேர்ந்த கோயில் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது