டில்லியில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: நீட் தேர்வு குறித்து மாணவர்கள்
கவலைப்பட வேண்டாம். இருதரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் செவ்வாய் வரை தற்பாதைய நிலையே தொடரும்.
நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு இடங்களுக்கு மட்டுமே விலக்கு கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்