ஆசிரியரை பிரம்பால் அடித்த பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு!!


தானேயில் ஆசிரியரை பிரம்பால் அடித்த பள்ளி முதல்வர் உள்பட
4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முறைகேடு புகார்
தானே மாவட்டம், டிட்வாலாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சஞ்சய். இவர் பள்ளியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

பிரம்பால் தாக்கினர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளியின் முதல்வர் ராவ்சாகிப் குமாவத் மற்றும் சிலர் ஆசிரியர் சஞ்சயை சரமாரியாக பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சஞ்சய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பள்ளி முதல்வர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பள்ளி முதல்வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...