*திருச்சி விமான நிலையத்தில் வேலை என வரும் தகவல் வதந்தி என திருச்சி மாநகர
காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். "படித்த மற்றும் விருப்பம் உள்ள இளைஞர்கள் சில செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதாகவும், அந்த தகவல்கள் போலியானவை அதை நம்பி ஏமாற வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.*