புதுடில்லி : ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஆர்ஜியோ நிறுவனத்தின், 4ஜி – பியூச்சர் போனின் வினியோகம்
, இன்று துவங்குகிறது.இது குறித்து, ஆர்ஜியோவின் கூட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:முதலில், கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களில், ஆர்ஜியோ போன் வினியோகம் துவங்கும். முதற்கட்டமாக, 60 லட்சம் போன்கள் வினியோகிக்கப்படும்.
இந்த பணி, அடுத்த, 10 – 15 நாட்களுக்குள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆக., 24ல், ஆர்ஜியோ போனுக்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், ஆர்ஜியோ வலைதளத்தில், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின், பியூச்சர் போனை திரும்ப ஒப்படைத்து, 1,500 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என, ஆர்ஜியோ அறிவித்துள்ளதே, இத்தகைய வரவேற்புக்கு காரணம்.எனினும், ஆர்ஜியோ போனுக்கான அடுத்த முன்பதிவு குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.