தனியார் பள்ளியில் ஆசிரியைக்கு கத்திக்குத்து!!!

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் சோகண்டி பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றும் பூங்கொடி(27) என்பவரை, அதே பள்ளியில் படித்த யோகேஷ்(16) என்ற மாணவன் வகுப்பறையில் கத்தியால் குத்தினான். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய அவனை சக ஆசிரியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன் யோகேஷ் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், பூங்கொடி புகார் காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான். இதன் காரணமாக தான், அவன் கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...