போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக்
கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம், நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டதால் இன்று (ஜனவரி 12) காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் துணை நிதி நிலை அறிக்கையில், ஓய்வூதியப் பலன், தொழிலாளருக்கான நிலுவைத் தொகை, உள்ளிட்டவற்றின் கூடுதல் நிதியாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருவதால் பொதுமக்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத் துறை சார்பில் தகவல் மையங்களும், சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு செய்யத் தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவது போலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பொங்கல் பண்டிகைக்காக பூந்தமல்லியிலிருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு இங்கிருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...