தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!!!


2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக எழுந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அரங்கில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசின் கடன் அதிகரித்துவரும் நிலையில் மக்களிடையே பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு தானிய உற்பத்தியின் இலக்கு 100 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தமிழகம் எட்டியதா என்பது தற்போதைய பட்ஜெட்டில்தான் தெரியவரும். நெருக்கடியில் உள்ள விவசாயிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மது விற்பனையை அரசிடமிருந்து தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகளின் அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், புதிய வேலைவாய்ப்புத் திட்டம் எனப் பல்வேறு துறைகளில் அரசின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளை பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி நடைமுறையில் பொருள்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களைவிட வாங்கும் திறன் அதிகம் உள்ள மாநிலங்களுக்கே அதிக வருவாய் கிடைக்கும். இதன்படி ஜிஎஸ்டியால் வருவாய் அதிகம் பெறும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. எனவே, இதன் பலன்கள் இந்த பட்ஜெட்டில் எதிரொலிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...