**ஏப்ரல் 23. சென்னை* .
*தொடர் உண்ணாவிரதப் போராட்டம்*
*போராட்ட வெற்றிக்கான அரசாணை தயார்* .
*போராட்டக் களமும் தயார்* .
*போராட்ட தேதியும் குறித்தாச்சு* .
போர்க்களம் காண
இனியும் சுணக்கம் ஏனோ?
" *தொடர் போராட்டம் அறிவித்தால் களம்காண தயார்* " என்று வாய்சவடால் பேசியவர்கள் எல்லாம் எங்கே?
வாட்ஸ்அப்பில் வீரவசனம் பேசியவர்கள் களமாட பயந்து ஒதுங்குவது நியாயமா?
" *யாரோ போராடுகிறார்கள்* ?
*நல்லாவும் போராடுவார்கள்* " நாம் போகாவிட்டாலென்ன?
என்று நினைத்து இருக்கிறீர்களா?
*இந்நாள் வரை*
*பழைய ஊதியம் வாங்கும் போராட்டத்தில்* *நீடித்திருப்பதே பெரிது* ;
இதுக்கே எத்தனை வசவுகள் வீட்டில்..
" *இது தெரியாமல் போராட வா; போராட வா என்று அழைப்பு வேறு* " என்று தாங்கள் முனகும் சத்தமும் எம்மை எட்டாமலில்லை.
"சரி.. வைக்கிறது வைக்கிறீங்க.. ஏதோ மாவட்ட தலைநகரில் வைத்தீர்களா.. *சென்னையாம் சென்னை* ...
*யாரய்யா விடுவார்கள் எம்மை* "
என்ற உமது ஏக்கமும் புரிகிறது.
எல்லாமே எளிதாகிவிட்டால் அதிலென்ன இருக்கிறது சுவாரசியம்?
*தடைகளைத் தாண்டி* *தடம் நோக்கி*
*ஓடி வருவது தானே சாதனை* .
*எட்டாண்டுகளாய் பட்ட வேதனையை* *துடைக்க*
*இறுதி பிரம்மாஸ்திரமாய் இருக்கும்* இப்போராட்டத்தை
வெற்றியடையச் செய்வது *பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வருகையிலும் தானே உள்ளது* .
*கணவர், மாமனார்,அத்தை*
என சகலரையும் சமாளித்து
போராட்டக்களம் நோக்கி வருவதற்கு
*பெரிய பிராயத்தனம்* செய்ய வேண்டும் என்பதும் யாவரும் அறிந்ததே.
நாளை அடைய போகும்
ஊதிய பலனால்
*மேற்கூறிய யாவருமே பயனாளிகளே* என்பதை *புரியும் விதத்தில்*
*பக்குவமாய் விளக்கும்* *கலையை*
*கைவரப் பெற்றவர்கள்தானே* நீங்கள்.
*முடியும் என்று நினைத்தால் யாவும் சாத்தியமே* ..
போக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதுவும் சாத்தியமே..
*ஒரே பள்ளியில் ஒரே பதவியில் பணிபுரிந்து சம ஊதியம் கேட்கும்* நம்மில்
*ஒருவரோ போராட்டக்களத்தில்* ;
*நாமோ விடுமுறைக் கொண்டாட்டத்தில்* ..
இதில் எங்கே வாழ்கிறது சமதர்மம்?
ஒருவேளை, " *எமக்கு இந்த ஊதியமே போதும்* .."
என்ற பெருந்தன்மை உணர்வில் தான் போராட்டக்களங் காண தயங்குகிறீர்களோ..?..
உமக்கு போதுமென்று தோன்றினாலும் தேவையில்லையென்று எண்ணினாலும் *சமூக நீதி காக்க சமதர்மம் நிலைக்க ஆதரவுக்கரம் நீட்ட*
*தங்களது வருகை அவசியம்*
*என்பதை உணருங்கள்* .
*பாதிக்கப்பட்ட இருபதாயிரம் பேரும் ஓரிடத்தில் கூடி*
*ஓங்கி குரலொடுத்தால்*
*அசையா அரசும் அசைந்து தானே தீரும்* ..
*அரசாணையும் வந்தே தானே தீரும்* .
*இருபதாயிரம் பேர் ஓரிடத்தில் உண்ணாநிலை* ..
*கற்பனை செய்து பாருங்களேன்* ..
*ஒரு நிமிடம் கண்ணைமூடி* ..
*வெற்றி!வெற்றி! வெற்றி!* என்று
*கொட்டும் முரசும்*
*காதினில் கேட்கிறது தானே* ..
*கடமையை கண்ணியமாய் செய்யும்* *நாம் உரிமையை கேட்க வீதியினில் இறங்கி போராடத் தயக்கம் காட்டலாமா* ??
*அடக்கி வைப்பது அடிமைத்தனம் என்றால்*
*முடங்கிக் கிடப்பது அதுவும் தானே முடங்குவது மடத்தனம் அல்லவா* ??
*ஒவ்வொருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்* *யாவருக்கும் பொதுவான ஊதிய பிரச்சனைக்காக நான்கு நாட்கள் ஒதுக்க இயலாதா நண்பர்களே* ..
*நமது தோழிகளுடன் சுற்றுலா செல்வதாக பாவித்து போராட்டக்களம் புக நினைத்தாலென்ன* சகோதரிகளே..
*விடுமுறை இன்னும் விடவில்லை*
என்று நினைத்துக் கொண்டு
*புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி* *சென்னையில் நடைபெறுவதாக பாவித்து பயணம் கிளம்பினாலென்ன* ?
சகோதரிகளே..
வாய்ப்புகள் ஒருமுறை தான் வரும். அவ்வரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டு உங்களால் மற்றவர்களும் தவறவிடும் அபாக்கிய நிலைமை தேவையா
என சிந்திப்பீர்.
*மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்பத்துடன் பங்கு பெறவும் வழியுண்டு* .
இன்னும் ஏனிந்த தயக்கம்?
*வரலாறு சொல்லிக் கொடுக்கும்* *ஆசிரியர்களாகிய நமக்கு*
*வரலாறு படைக்க கிடைத்த*
இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள் சகோதரிகளே..
ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது
பிடில் வாசித்த மன்னனை போல் நமக்கென்ன வந்தது என்றில்லாமல் *அடுத்தவர் துயர் துடைக்க*
*தன்னுயிர் கொடுக்க துணிந்த*
*வீரத் தியாகிகளாய் புறப்பட்டு வாருங்கள் சகோதரிகளே* ..
*வெற்றி கிட்டி அரசாணை பெறுவதும்* ... *இல்லை* ... *போராட்டம் நாளும் தொடர்வதும் நம் வருகையிலேயே உள்ளது*
என்பதை மறவாதீர் சகோதரிகளே..
*எல்லாம் தெரிந்தும்* *யாவும் புரிந்தும்*
*ஏதும் நடக்காதது போல் பாவித்து*
நாமிருக்க தொடங்குவது
*நம்மை அழிப்பதுடன்*
*நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும்* என்பதை உணருங்கள் சகோதரிகளே..
*வாழ்வது ஒருமுறை* ;
*அடுத்தவருக்கு பயன்படும் வகையில்*
*வாழ கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்* *சகோதரிகளே* ..
தன்நலத்துடன் பொதுநலன் கலந்த இவ்வறப்போராட்டத்தில்
பங்களிப்பு செய்வதை பாக்கியமாய் கருதி *தடைகளைத் தகர்த்தெறிந்து*
*களங்காண வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்* காத்திருக்கிறோம் சகோதரிகளே..
*ஊதிய பதிவேட்டில்*
*கையொப்பமிடும் போதொல்லாம்*
*சிந்தும் கண்ணீர்த்துளி உண்மையானால்*
*நீங்கள் சென்னை வருவதும் சாத்தியமே* !
*நன்றி* .
போராட்டக்களத்தில் சந்திப்போம்.
🙏 *பா.அசோக்குமார்*
*சத்தியமங்கலம்*
*ஈரோடு மாவட்டம்* .
*தொடர் உண்ணாவிரதப் போராட்டம்*
*போராட்ட வெற்றிக்கான அரசாணை தயார்* .
*போராட்டக் களமும் தயார்* .
*போராட்ட தேதியும் குறித்தாச்சு* .
போர்க்களம் காண
இனியும் சுணக்கம் ஏனோ?
" *தொடர் போராட்டம் அறிவித்தால் களம்காண தயார்* " என்று வாய்சவடால் பேசியவர்கள் எல்லாம் எங்கே?
வாட்ஸ்அப்பில் வீரவசனம் பேசியவர்கள் களமாட பயந்து ஒதுங்குவது நியாயமா?
" *யாரோ போராடுகிறார்கள்* ?
*நல்லாவும் போராடுவார்கள்* " நாம் போகாவிட்டாலென்ன?
என்று நினைத்து இருக்கிறீர்களா?
*இந்நாள் வரை*
*பழைய ஊதியம் வாங்கும் போராட்டத்தில்* *நீடித்திருப்பதே பெரிது* ;
இதுக்கே எத்தனை வசவுகள் வீட்டில்..
" *இது தெரியாமல் போராட வா; போராட வா என்று அழைப்பு வேறு* " என்று தாங்கள் முனகும் சத்தமும் எம்மை எட்டாமலில்லை.
"சரி.. வைக்கிறது வைக்கிறீங்க.. ஏதோ மாவட்ட தலைநகரில் வைத்தீர்களா.. *சென்னையாம் சென்னை* ...
*யாரய்யா விடுவார்கள் எம்மை* "
என்ற உமது ஏக்கமும் புரிகிறது.
எல்லாமே எளிதாகிவிட்டால் அதிலென்ன இருக்கிறது சுவாரசியம்?
*தடைகளைத் தாண்டி* *தடம் நோக்கி*
*ஓடி வருவது தானே சாதனை* .
*எட்டாண்டுகளாய் பட்ட வேதனையை* *துடைக்க*
*இறுதி பிரம்மாஸ்திரமாய் இருக்கும்* இப்போராட்டத்தை
வெற்றியடையச் செய்வது *பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வருகையிலும் தானே உள்ளது* .
*கணவர், மாமனார்,அத்தை*
என சகலரையும் சமாளித்து
போராட்டக்களம் நோக்கி வருவதற்கு
*பெரிய பிராயத்தனம்* செய்ய வேண்டும் என்பதும் யாவரும் அறிந்ததே.
நாளை அடைய போகும்
ஊதிய பலனால்
*மேற்கூறிய யாவருமே பயனாளிகளே* என்பதை *புரியும் விதத்தில்*
*பக்குவமாய் விளக்கும்* *கலையை*
*கைவரப் பெற்றவர்கள்தானே* நீங்கள்.
*முடியும் என்று நினைத்தால் யாவும் சாத்தியமே* ..
போக வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதுவும் சாத்தியமே..
*ஒரே பள்ளியில் ஒரே பதவியில் பணிபுரிந்து சம ஊதியம் கேட்கும்* நம்மில்
*ஒருவரோ போராட்டக்களத்தில்* ;
*நாமோ விடுமுறைக் கொண்டாட்டத்தில்* ..
இதில் எங்கே வாழ்கிறது சமதர்மம்?
ஒருவேளை, " *எமக்கு இந்த ஊதியமே போதும்* .."
என்ற பெருந்தன்மை உணர்வில் தான் போராட்டக்களங் காண தயங்குகிறீர்களோ..?..
உமக்கு போதுமென்று தோன்றினாலும் தேவையில்லையென்று எண்ணினாலும் *சமூக நீதி காக்க சமதர்மம் நிலைக்க ஆதரவுக்கரம் நீட்ட*
*தங்களது வருகை அவசியம்*
*என்பதை உணருங்கள்* .
*பாதிக்கப்பட்ட இருபதாயிரம் பேரும் ஓரிடத்தில் கூடி*
*ஓங்கி குரலொடுத்தால்*
*அசையா அரசும் அசைந்து தானே தீரும்* ..
*அரசாணையும் வந்தே தானே தீரும்* .
*இருபதாயிரம் பேர் ஓரிடத்தில் உண்ணாநிலை* ..
*கற்பனை செய்து பாருங்களேன்* ..
*ஒரு நிமிடம் கண்ணைமூடி* ..
*வெற்றி!வெற்றி! வெற்றி!* என்று
*கொட்டும் முரசும்*
*காதினில் கேட்கிறது தானே* ..
*கடமையை கண்ணியமாய் செய்யும்* *நாம் உரிமையை கேட்க வீதியினில் இறங்கி போராடத் தயக்கம் காட்டலாமா* ??
*அடக்கி வைப்பது அடிமைத்தனம் என்றால்*
*முடங்கிக் கிடப்பது அதுவும் தானே முடங்குவது மடத்தனம் அல்லவா* ??
*ஒவ்வொருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்* *யாவருக்கும் பொதுவான ஊதிய பிரச்சனைக்காக நான்கு நாட்கள் ஒதுக்க இயலாதா நண்பர்களே* ..
*நமது தோழிகளுடன் சுற்றுலா செல்வதாக பாவித்து போராட்டக்களம் புக நினைத்தாலென்ன* சகோதரிகளே..
*விடுமுறை இன்னும் விடவில்லை*
என்று நினைத்துக் கொண்டு
*புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி* *சென்னையில் நடைபெறுவதாக பாவித்து பயணம் கிளம்பினாலென்ன* ?
சகோதரிகளே..
வாய்ப்புகள் ஒருமுறை தான் வரும். அவ்வரிய வாய்ப்பை நீங்கள் தவறவிட்டு உங்களால் மற்றவர்களும் தவறவிடும் அபாக்கிய நிலைமை தேவையா
என சிந்திப்பீர்.
*மனமிருந்தால் மார்க்கமுண்டு. குடும்பத்துடன் பங்கு பெறவும் வழியுண்டு* .
இன்னும் ஏனிந்த தயக்கம்?
*வரலாறு சொல்லிக் கொடுக்கும்* *ஆசிரியர்களாகிய நமக்கு*
*வரலாறு படைக்க கிடைத்த*
இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள் சகோதரிகளே..
ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது
பிடில் வாசித்த மன்னனை போல் நமக்கென்ன வந்தது என்றில்லாமல் *அடுத்தவர் துயர் துடைக்க*
*தன்னுயிர் கொடுக்க துணிந்த*
*வீரத் தியாகிகளாய் புறப்பட்டு வாருங்கள் சகோதரிகளே* ..
*வெற்றி கிட்டி அரசாணை பெறுவதும்* ... *இல்லை* ... *போராட்டம் நாளும் தொடர்வதும் நம் வருகையிலேயே உள்ளது*
என்பதை மறவாதீர் சகோதரிகளே..
*எல்லாம் தெரிந்தும்* *யாவும் புரிந்தும்*
*ஏதும் நடக்காதது போல் பாவித்து*
நாமிருக்க தொடங்குவது
*நம்மை அழிப்பதுடன்*
*நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும்* என்பதை உணருங்கள் சகோதரிகளே..
*வாழ்வது ஒருமுறை* ;
*அடுத்தவருக்கு பயன்படும் வகையில்*
*வாழ கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்* *சகோதரிகளே* ..
தன்நலத்துடன் பொதுநலன் கலந்த இவ்வறப்போராட்டத்தில்
பங்களிப்பு செய்வதை பாக்கியமாய் கருதி *தடைகளைத் தகர்த்தெறிந்து*
*களங்காண வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்* காத்திருக்கிறோம் சகோதரிகளே..
*ஊதிய பதிவேட்டில்*
*கையொப்பமிடும் போதொல்லாம்*
*சிந்தும் கண்ணீர்த்துளி உண்மையானால்*
*நீங்கள் சென்னை வருவதும் சாத்தியமே* !
*நன்றி* .
போராட்டக்களத்தில் சந்திப்போம்.
🙏 *பா.அசோக்குமார்*
*சத்தியமங்கலம்*
*ஈரோடு மாவட்டம்* .