ஏசெர் வெளியிட்ட புது லேப்டாப்!


ஏசெர் வெளியிட்ட புது லேப்டாப்!
ஏசெர் நிறுவனத்தின் நிட்ரோ 5 மாடல் லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் லேப்டாப் விற்பனையில் முன்னணி இடத்தில் இருந்துவரும் ஏசெர், நிட்ரோ 5 எனும் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக நேற்று (ஜூன் 28) அறிவித்திருக்கிறது. விண்டோஸ் 10 ஹோமில் இயங்கும் இந்த லேப்டாப்பில் சிஸ்டம் மானிட்டர் மற்றும் கூலிங் மேனேஜ்மென்ட்டுக்கு பிரத்யேக மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

அவற்றுடன் 15.6 இன்ச் திரை, இன்டெல் கோர் ஐ5, கோர் ஐ7, கோர் ஐ5+அல்லது கோர் ஐ7+ பிராசஸர்ஸ், 8GB RAM மற்றும் 1TB HDD/ 16GB Optane or 128GB கூடுதலாக நீட்டிக்கும் வசதி, முன்பக்க வெப் கேமரா, HDMI 2.0 போன்ற வசதிகள் உள்ளன.

இதன் ஏஎம்டி ரைஸென் 5 மாடல் விலை ரூ. 65,999இல் இருந்து தொடங்குகிறது. இன்டெல் கோர் அமையப்பெற்ற மாடல் விலை ரூ.72,999இல் தொடங்குகிறது. ஏசெர் நிறுவன ஸ்டோர்கள், முக்கியக் கடைகள், மற்றும் இணையதளங்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்குக் கிடைக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...