*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள மேல்காரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதியதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வீட்டிலிருந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.*
பள்ளிக்கு வந்த மாணவர்களை, SMC உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க நெற்றித்திலகமிட்டு மாலை அணிவித்து வரவேற்றனர். *மேல்மலையனூர் வட்டார கல்வி அலுவலர் திரு.பொ.சிவக்குமார்* அவர்களின் வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர் *திரு.ரே. ஏழுமலை* அவர்களும் உதவி ஆசிரியை *திருமதி.பொ.மாலதி* அவர்களும் *SMC உறுப்பினர்களும்* கலந்து கொண்டு வாகனத்தில் ஊர்வலமாக வரவேற்பளித்த நிகழ்வு பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

