5மார்க் வாங்கிய அண்ணா பல்கலை. மாணவருக்கு மறு மதிப்பீடு 77 மதிப்பெண்

*🌐அண்ணா பல்கலைக்கழகத்தில், 5 மதிப்பெண்
பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டின்போது 77 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது*


 *🌐இதுபோன்ற ஆதாரங்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்ைககளுக்கு காரணம் என்று கூறப்புடகிறது*


*🌐2017ம் ஆண்டு ஏப்ரல்/மே மாதத்தில் தேர்வு எழுதிய ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளது*


 *🌐இதுபோல பல மாதிரி விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன*


*🌐அதில் ஒரு மாணவர் 5 மதிப்பெண்களை பெற்றுவிட்டு மறுதிருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ளார்*


*🔴🔴15 மதிப்பெண் வித்தியாசமே அதிகம்*


*🌐மறுதிருத்தத்தின் போது, அவருக்கு 45 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது*


 *💫அண்ணா பல்கலைக்கழக மறுதிருத்த விதிமுறைப்படி, ஒரிஜினல் மதிப்பெண்ணுக்கும், மறுதிருத்தத்திற்கு பிறகான மதிப்பெண்ணுக்கும் நடுவே 15 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்தால், மீண்டும் ஒரு மறுதிருத்தம் செய்யப்பட வேண்டும்*


*🔴🔴77 மார்க்காம்*


*🌐இந்த விஷயத்தில் 40 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்துள்ளது என்பதால் மறுதிருத்தம் நடக்கிறது. அங்குதான் அடுத்த கோல்மால் நடக்கிறது*


 *🌐மறுதிருத்தத்தை மறுதிருத்தம் செய்தபோது, 5 மதிப்பெண் பெற்ற அந்த மாணவருக்கு 77 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதாம்*


 *🌐இதன்பிறகு இதில் எது பொதுவான மதிப்பெண் என கணக்கிடப்பட்டு மாணவருக்கு வழங்கப்பட்டதாம்*


*🔴🔴பல விஷயங்கள்*


*🌐இது ஒரு சம்பவம்தான்* *இதுபோல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மடுவிற்கும், மலைக்குமான வித்தியாசத்தில், மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன* *தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா இதன் பின்னணியில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது*


*🔴🔴ஊழல் சாம்ராஜ்யம்*


*🌐உமாவுக்கு பல பேராசிரியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். பணத்தை வாங்குவது ஒருவர், சப்ளை செய்வது ஒருவர், பேராசிரியர்களை அதிக மதிப்பெண் வழங்க சொல்லி அழுத்தம் கொடுப்பது மற்றொருவர் என இது பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட ஊழல் சாம்ராஜ்யம்*


 *🌐இதைத்தான் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பெரிய நெட்வொர்க்கே இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக நேற்று குறிப்பிட்டார்*



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...