சாம்சங் நிறுவனம் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அதன் ஸ்மார்ட்போன் மாடல்களை அதிகளவில் விற்பனை செய்து வருகிறது, மேலும் இந்நிறுவனம் தயார் செய்யும் ஸ்மார்ட்போன் அனைத்தும் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஒருவர் பயன்படுத்திய சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய ஒருவரின் பணப்பையும் சேர்ந்து எரிந்ததுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் அனைவரும் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும், பின்பு சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நியூயார்க்
நியூயார்க் போஸ்ட்டில் வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் லாங் ஐலண்ட் எனும் பகுதி உள்ளது அங்கு டயேன் சுங் என்பவர்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி அன்று அவர் தனது ஸ்மார்ட்போன் மிகவும் சூடாக இருப்பதாக உணர்ந்தார்.
கேலக்ஸி நோட் 9
இதை தொடர்ந்து அவர் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை நிறுத்தி, அவரது பணப்பையில் வைத்திருந்தார்.
பின்பு பளபளப்பான புகை' அவரது பையில் இருந்து தோன்ற தொடங்கியது. அதற்குபிறகு தனது பையில் போனை வெளியே இழுக்க முயற்சிக்கையில், அவர் தனது விரல்களை எரியத் தொடங்கின.
நஷ்டஈடு
அதன்பின்பு அவர் எடுத்த அந்த ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்து, ஒரு வாளி தண்ணீரில் மூழ்கச் செய்தார். பின்பு எறிந்த அந்த ஸ்மார்ட்போனை வைத்து குயின்ஸ் உச்சநீதி மன்றத்தில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்குத் தாக்கல் செய்தார், தென் கொரிய நிறுவனத்திடமிருந்து தனக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்டஈடு கேட்டுள்ளார்.
விற்பனைக்கு தடை
மேலும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு தடை விதிக்கவும் கோரியுள்ளார் டயேன் சுங். தற்சமயம்
லித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும். இந்த பிரச்சனையால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிக்களை பாதுகாக்கவும், அதிக படியான சார்ஜிங்கை நிறுத்துவதற்கும் வழி முறைகளை கண்டுபிடித்துள்ளனர்
