பள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியை மர்ம நபர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம்!!!


குறிஞ்சிப்பாடி செம்படவர்  வீதியை சேர்ந்த சமையல் வேலை செய்யும் சுப்ரமணியன் மகள் ரம்யா வயது- 23 குறிஞ்சிப்பாடி ஆண்டித்தெருவில் இயங்கி கொண்டிருக்கும் காயத்திரி பிரைமரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார் இவர் வழக்கம் போல் இன்று காலையில் பள்ளிக்கு  22-02-2019 இன்று காலை சுமார் 8-30 மணியளவில் வேலைக்கு வந்துள்ளார்.இவர் தான் முதன் முதலில் பள்ளிக்கு வந்துள்ளதாக கூறுகின்றார்கள்அவர் பள்ளியின் அறையில் இருக்கும்போது அந்த சமயம் மர்ம நபர் பள்ளியின் உள்ளே இருந்த ஆசிரியை ரம்யா என்பவரை கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு தப்பி ஓடி சென்றுவிட்டார்.தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலிசார் பிரேதத்தை குறிஞ்சிப்பாடி அரசு பொது மருத்துவ மனைக்கு 108- ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பிவைத்தனர்.கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை போலிசார் தேடிவருகின்றனர்.பொது மக்கள் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பேசி கொள்கின்றனர்.இச்சம்பவம் குறிஞ்சிப்பாடி மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...