மொத்தம் 250க்கும் மேற்பட்ட துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், 93 சதவீத இந்திய இளம் மாணவர்களுக்கு, பொறியியல், சட்டம், மருத்துவம், மேலாண்மை, வடிவமைப்பு உட்பட 7 துறைகளை மட்டுமே அறிந்துள்ளனர் என்கிறார், இந்த ஆய்வை நடத்திய மைண்டலர் நிறுவனத்தின் சி.இ.ஓ., பிரதீக் பார்கவா.
இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான கரியர் கவுன்சிலர்களே இருப்பதால், மாணவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனைகள் வழங்கி, அவர்களுக்கு சரியான துறையை தேர்வு செய்ய வழிகாட்ட ஆளில்லை என்றும் அவர் கூறுகிறார்.
