ஆண் குழந்தைகள் நலனுக்காக 'பொன் மகன்' சேமிப்பு திட்டம்!


ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோவை தலைமை தபால்நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி லியோ மைக்கேல் கூறியதாவது:


ஆண் குழந்தைகளுக்காக, 'பொன் மகன்' சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம்.


 ஏப்., - மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு, 8 சதவீத வட்டி அளிக்கப்படும். திட்டத்தில், இணைய வயது வரம்பு கிடையாது. இவ்வாறு, அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...