மகாத்மா காந்தி படத்துடன் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும். இப்படி வெளியிடப்படும்
நோட்டுக்களில் ரூபாய் சின்னமும், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் அச்சிடப்பட்டு இருக்கும். மறுபக்கத்தில், 2014 ஆண்டும் அச்சிடப்பட்டு இருக்கும். மகாத்மா காந்தி என்ற பெயருக்குரிய எழுத்துக்கள் அச்சிடப்பட்டு இருக்காது. இப்போது புழக்கத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவிலேயே புதிய நோட்டுகளும் இருக்கும். இதற்கு முன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். ரூ.50, ரூ.20, ஆகிய ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்படும். 50 ரூபாய் நோட்டுகளுக்கு முன் ஆர் என்ற எழுத்து இடம்பெற்று இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது