குரூப் - 1 தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு

துணை கலெக்டர் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு வரும் 20ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஹால் டிக்கெட்டை அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

துணை கலெக்டர் - 3, டி.எஸ்.பி. - 33, வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் - 10 என 79 காலி பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடக்கிறது.

வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

உரிய முறையில் விண்ணப்பித்தும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், உரிய விவரங்களை contacttnpsc.@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதிக வயது பிரச்னை காரணமாக 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...