தமிழகத்தில் 5 இடங்களில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். சட்டசபையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர்,
உடுமலை, மணிகண்டம், சின்னசேலம், காட்டு மன்னார் கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், 5 வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து புதிய வலைதளம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
உடுமலை, மணிகண்டம், சின்னசேலம், காட்டு மன்னார் கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், 5 வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து புதிய வலைதளம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.