மாணவர்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை

மாணவர்கள் பள்ளிக்கு அரை நாள் வராவிட்டாலும், அவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்த, டிரேசி, பால்
தம்பதியினரின் குழந்தைக்கு, உடல்நிலை சரியில்லாததால், 15 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பின், பள்ளிக்கு சென்ற போது, பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்க, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.நிர்வாகத்தின் உத்தரவைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள், தண்டனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்தனர், ஆனால், அடுத்த முறை விதிமுறைகளை மீறினால், மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்படும் என, எச்சரித்தனர்.

'குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்; அவர்களின் உடல்நிலையை பொறுத்து, விடுப்பு வழங்குவது குறித்து, பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்வர்' என, அதிகாரிகள் கூறினர்.சிறை தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளின் முடிவுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...