ஆஸ்திரேலியாவில், 'சேனல் டென்' தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய, 'ஸ்பெல்லிங் பீ' என்ற, புதிய சொற்களை உச்சரிக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த, அனிருத் கதிர்வேல், 9, 'சாம்பியன்' பட்டம் வென்றான்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் சுஜாதா தம்பதி, 16 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இவர்களின் மகன், அனிருத் கதிர்வேல். சிறு வயது முதலே, படிப்பதிலும், புதிய சொற்களை தேடி, அவற்றின் பொருளையும், உச்சரிப்பையும் அறிந்து கொள்வதில், அனிருத்துக்கு அலாதி விருப்பம். ''தினமும், 10 புதிய வார்த்தைகளையும், அவற்றின் அர்த்தத்தையும், உச்சரிப்பு இலக்கணத்தையும் கற்றுக் கொள்ளாமல் படுக்கைக்கு செல்ல மாட்டேன்,'' என்கிறான் அனிருத்.
இந்த பழக்கமே, அனிருத்துக்கு, சாம்பியன் பட்டத்தையும், 38 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை மற்றும் 6.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பரிசுப் பொருட்களையும் பெற்றுத் தந்துள்ளது
தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் சுஜாதா தம்பதி, 16 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் குடியேறினர். இவர்களின் மகன், அனிருத் கதிர்வேல். சிறு வயது முதலே, படிப்பதிலும், புதிய சொற்களை தேடி, அவற்றின் பொருளையும், உச்சரிப்பையும் அறிந்து கொள்வதில், அனிருத்துக்கு அலாதி விருப்பம். ''தினமும், 10 புதிய வார்த்தைகளையும், அவற்றின் அர்த்தத்தையும், உச்சரிப்பு இலக்கணத்தையும் கற்றுக் கொள்ளாமல் படுக்கைக்கு செல்ல மாட்டேன்,'' என்கிறான் அனிருத்.
இந்த பழக்கமே, அனிருத்துக்கு, சாம்பியன் பட்டத்தையும், 38 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை மற்றும் 6.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பரிசுப் பொருட்களையும் பெற்றுத் தந்துள்ளது
