தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உட்பட, 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன; இதனால், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து, '1,650 காலி பணியிடம் நிரப்பப்படும்' என, செப்டம்பரில்,
சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற, 1,650 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதில், 375 உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு, 2015 டிச., 28ல் வெளியானது. மீதமுள்ள, 1,275 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கவில்லை. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளருக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும்; மற்ற பதவிகளுக்கான தேர்வு, சென்னை பல்கலை மூலம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் இழுபறி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, '1,650 காலி பணியிடம் நிரப்பப்படும்' என, செப்டம்பரில்,
சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற, 1,650 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதில், 375 உதவி பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு, 2015 டிச., 28ல் வெளியானது. மீதமுள்ள, 1,275 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கவில்லை. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளருக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும்; மற்ற பதவிகளுக்கான தேர்வு, சென்னை பல்கலை மூலம் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தேர்வு அறிவிப்பை வெளியிடுவதில் இழுபறி நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.