தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. தேர்வுகளை கண்காணிக்க, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது
ஆசிரியர்களும், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக் கூடாது
மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் விதிமுறைப்படி தண்டனை வழங்கப்படும்
தனியார் பள்ளி தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக்கூடாது
ஆசிரியர்களும், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக் கூடாது
மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் விதிமுறைப்படி தண்டனை வழங்கப்படும்
தனியார் பள்ளி தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.