பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' '104'ல் சிறப்பு ஆலோசனை...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், '104' சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:பொதுவாக, தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி காரணமாக, மன உளைச்சலுக்கு
ஆளாகி இருப்பர். இந்த நேரத்தில் பெற்றோர் திட்டுவது, மாணவர்களிடம் விபரீத எண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். ஆறுதல் படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, '104'ஐ அழையுங்கள்; உளவியல் ரீதியாக, இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனைகளை தருகிறோம்.இது, நல்ல பலன் தரும். இதற்காக, கூடுதலாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...