பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!

பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.




பிளஸ் 2 பாட புத்தகம், ஏ5 அளவில் (5.83x8.27) உள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. கற்றலில் பின்னடைவு மற்றும் கற்கும் திறன் தாமதமாவதாகவும் ஒரு கருத்து எழுந்தது. இதை தொடர்ந்து புத்தக அளவை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி ஏ4 அளவில் (8.27x11.69) புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

பழைய புத்தகத்தில் இருந்த வரிகள், அளவு மாற்றி அச்சிடப்பட்ட புத்தகத்தில் மாறாமல் வந்துள்ளதா? அல்லது மாற்றம் உள்ளதா? என்பது குறித்த ஆய்வு, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. ஈரோட்டில் கணக்குப்பதிவியல், வணிகவியல், உயிரி-வேதியியல், ஆங்கில பாட புத்தகங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. ஒரு பாட பிரிவுக்கு மூன்று குழு வீதம், பாட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குழுவில் அரசு, மெட்ரிக்., பள்ளி என இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஈரோடு மட்டுமின்றி திருச்சி, சென்னையிலும் நடக்கும் இந்தப் பணி, அக்.,1ம் தேதி வரை நீடிக்கும் என்று, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...