ரிசர்வ் வங்கியின் குறுகியகால கடன்வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றதை தொடர்ந்து, முதல் நிதிக்கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி,
வட்டிவிகிதம் நிர்ணயிக்கும் குழு கூட்டம், திங்கள்கிழமை தொடங்கி, இன்று மதியம் வரை நடைபெற்றது. இதன்முடிவாக, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் விகிதத்தில் கால் சதவீதம் அதாவது 0.25% குறைத்து, 6.25% ஆக நிர்ணயிப்பதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் வரையிலும், செய்தியாளர்களை சந்தித்து, நிதிக்கொள்கை அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுவந்த நிலையில், இனி வரும் நாட்களில் இத்தகைய நடைமுறையை தொடரப் போவதாக, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வட்டிவிகிதம் நிர்ணயிக்கும் குழுவில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக, பிரதிநிதிகள் பங்கேற்று, நாட்டில் நிலவும் பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் வரை குறைக்க, ஒப்புதல் அளித்தனர். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றதை தொடர்ந்து, முதல் நிதிக்கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி,
வட்டிவிகிதம் நிர்ணயிக்கும் குழு கூட்டம், திங்கள்கிழமை தொடங்கி, இன்று மதியம் வரை நடைபெற்றது. இதன்முடிவாக, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் விகிதத்தில் கால் சதவீதம் அதாவது 0.25% குறைத்து, 6.25% ஆக நிர்ணயிப்பதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் வரையிலும், செய்தியாளர்களை சந்தித்து, நிதிக்கொள்கை அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுவந்த நிலையில், இனி வரும் நாட்களில் இத்தகைய நடைமுறையை தொடரப் போவதாக, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வட்டிவிகிதம் நிர்ணயிக்கும் குழுவில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக, பிரதிநிதிகள் பங்கேற்று, நாட்டில் நிலவும் பொருளாதார சூழலை கருத்தில்கொண்டு, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் வரை குறைக்க, ஒப்புதல் அளித்தனர். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.