சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியிலிருந்து ஒரு வாரத்துக்குள் எடுக்கும் பணத்தின் உச்சவரம்பு இன்று முதல் ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 ரூபாய், பழைய 500 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவித்த நாள் முதல் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கியால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ஏடிஎம்கள், வங்கிகள் என
இருவழிகளிலும் சேர்த்து ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய் மட்டுமே பணமாக எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நேற்றுவரை இருந்தது.
இன்று முதல் இந்தக் கட்டுப்பாடு சற்றுத் தளர்த்தப்பட்டு, வாரத்துக்கு 50,000 ரூபாய் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 13ம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுக்க எந்த வரம்பும் இருக்காது என்றும் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
1000 ரூபாய், பழைய 500 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவித்த நாள் முதல் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கியால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ஏடிஎம்கள், வங்கிகள் என
இருவழிகளிலும் சேர்த்து ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய் மட்டுமே பணமாக எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நேற்றுவரை இருந்தது.
இன்று முதல் இந்தக் கட்டுப்பாடு சற்றுத் தளர்த்தப்பட்டு, வாரத்துக்கு 50,000 ரூபாய் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 13ம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுக்க எந்த வரம்பும் இருக்காது என்றும் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.