நீட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் !!

நீட் (NEET) எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே 7ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை (மார்ச் 1) கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க cbseneet.nic.in என்ற இணையதளத்தை நாடலாம்



*வண்டலூர் பூங்காவில் நாளை முதல் கட்டணம் உயர்வு*

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. நாளை முதல் பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.50 ஆக உயர்கிறது. சிறுவர்-சிறுமிகளுக்கான கட்டணம் ரூ.20 ஆக அதிகரிக்கிறது. உயிரியல் பூங்காவின் வாகனக் கட்டணங்களும் நாளை முதல் உயர்கின்றன

*டெல்லியில் விருந்து வைத்து எடப்பாடி அசத்தல்*

3 நாள் பயணமாக டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தன் ஆதரவு அ.தி.மு.க. MPக்களுக்கு விருந்தளித்து அசத்தினார் எடப்பாடி. ஜெயலலிதாவோ பன்னீர்செல்வமோ டெல்லி வந்தபோது இப்படியொரு விருந்து கொடுத்ததில்லையாம்

*பாக்.கில் 350 தீவிரவாதிகள் கைது*

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை நடத்தப்பட்டது. இத்தேடுதல் வேட்டையில் 350 தீவிரவாதிகள் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...