ஆன்லைனில் ரயில்வே தேர்வு 319 கோடி பேப்பர்கள் மிச்சம்!!!


 நடத்தியதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமானதாக, தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது பற்றி

இந்திய ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரயில்வே பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வ தற்கு, எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், 'ஏ 4' அளவுடைய பல கோடி பேப்பர் கள் செலவாகி வந்தன. ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபு பொறுப்பேற்றபின், சுற்றுச்சூழல்பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, ரயில்வே பணிகளுக்கான தேர்வை, ஆன்லைனிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. உதவி ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உட்பட 14 ஆயிரம்பணியிடங்களுக்கான, முதல் கட்ட தேர்வு, நாடு முழுவதும், 351 மையங்களில், ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது; 92 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 2.73 லட்சம் பேர், தேர்வு செய்யப்பட்டு, அடுத்த கட்ட எழுத்து தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த தேர்வு, கடந்த, ஜன., 17 - 19 தேதிகளில் நடந்தது.

இதுவும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. இதில் இருந்து, 45 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர் முக தேர்வுக்குஅழைக்கப்பட்டனர்.பேப்பர் செலவு இல்லாமல் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம், 319 கோடி பேப்பர்கள் மிச்சமாயின; நான்கு லட்ச மரங்கள் காப்பாற்றப்பட்டன.

ஆன் லைனில் நடத்தப்பட்டதால், முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. கேள்வி
தாள் வெளியானது உட்பட, எந்தமுறைகேடுக் கும், இதில் இடமில்லை. நேர்முக தேர்வில் பங்கேற்றவர்களில், 14 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் சான்றிதழ் கள், செப்டம்பரில் ஆய்வு செய்யப்பட்டு, தீபாவளிக்கு முன் அவர் கள் பணியில் சேருவர். உலகிலேயே, ஆன் லைனில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தேர்வு, என்ற சாதனையையும், ரயில்வே படைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...